Press "Enter" to skip to content

நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளருமான சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர்:

சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை தொலைபேசியில் பேசிய மர்ம நபர், “கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளருமான சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். 

இது தொடர்பாக நீலாங்கரை காவல் துறையினருக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக காவல் துறை ஆய்வாளர் சத்தியலிங்கம் தலைமையிலான காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சரத்குமார் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சுமார் 2 மணிநேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இது குறித்து நீலாங்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா ஆகியோர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நபர்தான் சரத்குமார் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »