Press "Enter" to skip to content

பிரான்சில் ஒரே நாளில் 60486 பேருக்கு கொரோனா – 16 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பாரிஸ்:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கடந்த சில நாட்களாக பிரான்சில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்ரு உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவால் அந்நாட்டில் 828 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »