பீகாரில் வாக்காளர்கள் முக கவசங்களை அணிந்துகொள்வதும் சமூக இடைவெளியை பராமரிப்பதும் அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
பீகாரில் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘இன்று நடைபெறும் ஜனநாயக திருவிழாவில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையை படைக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இருப்பினும், முக கவசங்களை அணிந்துகொள்வதும் சமூக இடைவெளியை பராமரிப்பதும் அவசியம் ஆகும்’ என மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளில் இன்று நடைபெறும் தேர்தலில், மொத்தம் 1204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதிகளில் 2 கோடியே 35 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar