Press "Enter" to skip to content

கொரோனாவின் கோரப்பிடியில் இத்தாலி – 10 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு

இத்தாலியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

ரோம்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகையே உலுக்கி வருகிறது.

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 

தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 5 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியுள்ளது. அவர்களில் 12.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி 10-வது இடத்தில் உள்ளது

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ஒரே நாளில் 37 ஆயிரத்து 978 பேருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 401 ஆக உள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 636 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »