Press "Enter" to skip to content

அதிரும் அமெரிக்கா- ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்:

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது.

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

இந்நிலையில், ஒரே நாளில் அங்கு 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 1.08 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரே நாளில் 1090 பேருக்கு மேல் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 67 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »