Press "Enter" to skip to content

தீபாவளி பண்டிகை- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.  இதையொட்டி தமிழக ஆளுநர்   பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்.

வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளி திருநாள் எடுத்து இயம்புகிறது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »