150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. வாக்குச்சீட்டு முறைபடி நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 150 வார்டுகளில் 99 வார்டுகளுக்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி,
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – 41 வார்டுகளில் வெற்றி
அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) – 34 வார்டுகளில் வெற்றி
பாஜக – 22 வார்டுகளில் வெற்றி
காங்கிரஸ் – 2 வார்டுகளில் வெற்றி
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 150 வார்டுகளில் 75 வார்டுகளுக்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி,
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – 26 வார்டுகளில் வெற்றி
அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) – 31 வார்டுகளில் வெற்றி
பாஜக – 16 வார்டுகளில் வெற்றி
காங்கிரஸ் – 2 வார்டுகளில் வெற்றி
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[embedded content]
Source: Maalaimalar