Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை – மத்திய மந்திரி ஆய்வு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

சென்னை:

இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து நாடு முழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. 

மாநிலம் முழுதும் 190 இடங்களில் இன்று ஒத்திகை நடைபெற உள்ளது. ஒத்திகையை, மத்திய சுகாதாரத் துறை மந்திரி  ஹர்ஷ்வர்தன் இன்று ஆய்வு செய்கிறார்.

அதைத் தொடர்ந்து, சென்னை, பெரியமேட்டில் உள்ள, மத்திய மருந்து கிடங்கு, சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், முதலமைச்சர் இ.பி.எஸ்.,சை சந்தித்து பேசுகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »