மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார்.
சென்னை:
நாடு முழுவதும் 2ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கிய நிலையில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடக்கும் ஒத்திகையை ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் வாழ்த்து தெரிவித்தார்.
* கொரோனா பரவ தொடங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்பு பணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது.
* மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு.
* இந்தியாவில் 2,300 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
* தடுப்பூசி கண்டுபிடிக்க மட்டுமின்றி, அதனை உரிய முறையில் செலுத்தவும் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* ஜனவரி 17ந்தேதி போலியோ தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar