Press "Enter" to skip to content

கார் விபத்தில் காயமடைந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்

கர்நாடகத்தில் தேர் விபத்துக்குள்ளாகி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்.

மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக்

பனாஜி:

மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கடந்த மாதம் 12-ம் தேதி கர்நாடகத்தில் தேர் விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்தார். இதனால் அவர் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்நிலையில், கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் நாளை (24-ம் தேதி) டிஸ்சார்ஜ் ஆக உள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மத்திய மந்திரியின் மனைவி விஜயா நாயக் சிகிச்சை பலனின்றி இறந்தது நினைவிருக்கலாம்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »