Press "Enter" to skip to content

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், திருச்சியில் 7-ந்தேதி நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்க இருக்கிறது. இதையொட்டி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க. விரைவுப்படுத்தியுள்ளது. மேலும் விருப்பமனு கொடுத்த தொண்டர்களிடம் நேர்காணலையும் தி.மு.க. நடத்தி வருகிறது.

இந்தநிலையில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், திருச்சியில் 7-ந்தேதி நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »