Press "Enter" to skip to content

பெரியார் சிலைக்கு தீவைப்பு- பொதுமக்கள் போராட்டம்

பெரியாரின் வெண்கல சிலைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த கத்தாழை மேடு பகுதியில் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் சிலைக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.

பெரியாரின் வெண்கல சிலைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீவைப்பு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »