Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை -எல்கே சுதீஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷுக்கு கடந்த 20-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கடந்த 20-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 24-ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும் அவருக்கு கொரோனா தாக்கம் குறையவில்லை.

இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுதீஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது, தே.மு.தி.க.வின் பிரசார வியூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »