இரட்டை தொடர் வண்டி பாதை பணியை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னை நோக்கி வரும் தென்மாவட்ட தொடர் வண்டிகள் சுமார் 6 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே இரட்டை தொடர் வண்டி பாதை பணியை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் 6 மணி நேரம் தொடர் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் முத்துநகர், பொதிகை, கன்னியாகுமரி, கொல்லம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் சென்னை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர் வண்டிகள் திருமங்கலம், திருப்பரங்குன்றம், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6 மணி நேரமாக நிற்பதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar