Press "Enter" to skip to content

ரெயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கைபேசி சார்ஜ் செய்ய முடியாது -தொடர்வண்டித் துறை நடவடிக்கை

தொடர் வண்டிகளில் தீ விபத்துகளை தவிர்க்க வேறு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதொடர்வண்டித் துறை, அதுகுறித்து பயணிகளுக்கு தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

புதுடெல்லி:

கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தொடர் வண்டி பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கைபேசி சார்ஜிங் பாயிண்டுகள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்று தொடர் வண்டி பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரைத்தார். மின்கசிவு அபாயத்தைத் தவிர்க்க அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், பாதுகாப்பு கமிஷனரின் பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்ததொடர்வண்டித் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 16-ந் தேதி முதல் இதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்ட மேற்குதொடர்வண்டித் துறை நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் துணைப்பை துண்டித்து விடுகிறது.

ரெயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின்படி தாங்கள் இதை அமல்படுத்தி வருவதாக மேற்குதொடர்வண்டித் துறை தலைமை மக்கள்தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல் தற்போது வலியுறுத்தப்படுவதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெற்குதொடர்வண்டித் துறையும் அறிவித்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட, இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி தொடர் வண்டிகளில் கைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது.

ரெயில்களில் தீ விபத்துகளை தவிர்க்க வேறு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதொடர்வண்டித் துறை, அதுகுறித்து பயணிகள் உள்ளிட்டோருக்கு 7 நாட்களுக்கு தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டலதொடர்வண்டித் துறை நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »