நான் மேயராக இருந்தபோது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி வைத்திருந்தேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்தவேனில் பிரசாரம் செய்து பேசியதாவது:-
முதல்-அமைச்சர் சென்னையில் பிரசாரம் செய்தபோது, ‘மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது என்ன செய்தார்? என்று கேட்டிருக்கிறார். நான் 2 முறை மேயராக இருந்து என்னென்ன பணிகளை செய்தேன்? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
நான் மேயராக இருந்தபோது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி வைத்திருந்தேன். உங்களுடைய (அ.தி.மு.க.) 10 ஆண்டு கால ஆட்சியில் சென்னையை சீரழிந்த சென்னையாக மாற்றி வைத்திருக்கிறீர்கள். இதுதான் நீங்கள் செய்த சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar