Press "Enter" to skip to content

‘சச்சின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும்’ – ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அலையினை விழிப்போடு எதிர்கொள்ளுமாறும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »