Press "Enter" to skip to content

சீனாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பெய்ஜிங்:

சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.34 மணியளவில் சக்திவாய்ந்த ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

ஏற்கனவே, நேற்று இரவு 7.18 மணிக்கு சீனாவின் டாலிக் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »