Press "Enter" to skip to content

யாஸ் புயல் எதிரொலி : 22 சிறப்பு தொடர் வண்டிகள் ரத்து – தெற்குதொடர்வண்டித் துறை அறிவிப்பு

‘யாஸ்’ புயல் எதிரொலியால் கீழ்க்கண்ட 22 சிறப்பு தொடர் வண்டிகள் ரத்து செய்யப்படுவதாக தெற்குதொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது

சென்னை:

தெற்குதொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘யாஸ்’ புயல் எதிரொலியால் கீழ்க்கண்ட 22 சிறப்பு தொடர் வண்டிகள் ரத்து செய்யப்படுகின்றன.

* நாகர்கோவில்-ஷாலிமார் (02659) சிறப்பு தொடர் வண்டி இன்று (23-ந் தேதி), ஷாலிமார்-நாகர்கோவில் (02660) சிறப்பு தொடர் வண்டி 26-ந் தேதியும், ஹவுரா-கன்னியாகுமரி (02665) சிறப்பு தொடர் வண்டி 24-ந் தேதியும், ஹவுரா-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (02821) மற்றும் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஹவுரா (02822) சிறப்பு தொடர் வண்டிகள் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையிலும், ஷாலிமார்-திருவனந்தபுரம் (02642) சிறப்பு தொடர் வண்டி 25-ந் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

* எர்ணாகுளம்-பாட்னா (02643) சிறப்பு தொடர் வண்டி 24, 25-ந் தேதியும், பாட்னா-எர்ணாகுளம் (02644) 27, 28-ந் தேதியும், திருச்சி-ஹவுரா (02664) சிறப்பு தொடர் வண்டி 25-ந் தேதியும், ஹவுரா-திருச்சி (02663) 27-ந் தேதியும், சந்தரகாச்சி-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02807), திருவனந்தபுரம்-சில்சார் (02507) சிறப்பு தொடர் வண்டிகள் 25-ந் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

* எம்.ஜி.ஆர். சென்டிரல்-சந்தரகாச்சி (02808), தாம்பரம்-நியூ தின்சுகியா (05929), புவனேஸ்வர்-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02839) சிறப்பு தொடர் வண்டிகள் 27-ந் தேதியும், நியூ தின்சுகியா-தாம்பரம் (05930) தொடர் வண்டி 24-ந் தேதியும், ஜசிதி-தாம்பரம் (02376), எம்.ஜி.ஆர் சென்டிரல்-நியூ ஜல்பைகுரி (02611), புதுச்சேரி-ஹவுரா (02868) தொடர் வண்டிகள் 26-ந் தேதியும், தாம்பரம்-ஜசிதி (02375) தொடர் வண்டி 29-ந் தேதியும், நியூ ஜல்பைகுரி-எம்.ஜி.ஆர். சென்டிரல் (02612), எம்.ஜி.ஆர் சென்டிரல்-புவனேஸ்வர் (02840) சிறப்பு தொடர் வண்டிகள் 28-ந் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »