Press "Enter" to skip to content

தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும்- முதலமைச்சர் உத்தரவு

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

சென்னை:

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* ஊரடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.

* காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.

* அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* நகர்புறத்தை போன்று கிராமப்புறங்களிலும் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

* தமிழகத்தில் நேன்று ஒரே நாளில் 6,296 வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

* உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »