Press "Enter" to skip to content

சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் உள்பட12 எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் ரத்து மேலும் நீட்டிப்பு – தெற்குதொடர்வண்டித் துறை அறிவிப்பு

சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் உள்பட12 எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தெற்குதொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகளின் ரத்து மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் (வண்டி எண்: 06105), மங்களூர்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (06628), எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (02678), திருவனந்தபுரம்-மதுரை (06343), சென்னை எழும்பூர்-மன்னார்குடி (06179), எர்ணாகுளம்-காரைக்கால் (06188) இடையே இயக்கப்படும் தொடர் வண்டிகள் ஏற்கனவே ஜூன் மாதம் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த தொடர் வண்டிகள் ரத்து மேலும் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மங்களூரு (06627), கே.எஸ்.ஆர் பெங்களூரு-எர்ணாகுளம் (02677), மதுரை-திருவனந்தபுரம் (06344), திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் (06106), மன்னார்குடி-சென்னை எழும்பூர் (06180), காரைக்கால்-எர்ணாகுளம் (06187) இடையே இயக்கப்படும் தொடர் வண்டிகள் ஏற்கனவே ஜூன் மாதம் 2-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த தொடர் வண்டிகள் ரத்து மேலும் ஜூன் மாதம் 16-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »