Press "Enter" to skip to content

கொரோனா கால சேவை :தொடர்வண்டித் துறையை வரலாறு நினைவில் கொள்ளும் – பியூஷ் கோயல் பெருமிதம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியதொடர்வண்டித் துறை மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. இதை வரலாறு நினைவில் கொள்ளும் என பியூஷ் கோயல் கூறினார்.

புதுடெல்லி:

டெல்லியில் மண்டலதொடர்வண்டித் துறைக்களின் மூத்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தைதொடர்வண்டித் துறை துறை நேற்று நடத்தியது.

இதில்தொடர்வண்டித் துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியதொடர்வண்டித் துறை மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. இதை வரலாறு நினைவில் கொள்ளும்” என பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ஒரு மாதத்துக்கு முன்பாக 1,080 டேங்கர்களுடன் 272 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் தங்கள் சேவையை தொடங்கின. இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் 17 ஆயிரத்து 945 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 15 மாநிலங்களுக்கு கொண்டு போய்ச் சேர்த்துள்ளன எனவும் தெரிவித்தார்.

ரெயில்வே அதிகாரிகளின் கடின உழைப்பை பியூஷ் கோயல் மனதார பாராட்டினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »