Press "Enter" to skip to content

திருப்பதி அலிபிரி நடைபாதை ஜூன் 1-ந் தேதி முதல் மூடப்படும்

வருகிற 1-ந் தேதி முதல் ஜூலை மாதம் 31-ந் தேதி வரை திருப்பதி முதல் திருமலை வரையிலான அலிபிரி பாதை மூடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி நடைபாதை வழியாகவும் நடந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக அலிபிரி நடைபாதையில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதற்காக வருகிற 1-ந் தேதி முதல் ஜூலை மாதம் 31-ந் தேதி வரை திருப்பதி முதல் திருமலை வரையிலான அலிபிரி பாதை மூடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே திருமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அலிபிரியிலிருந்து ஸ்ரீவாரி மெட்டுக்கு இலவச பேருந்துகள் மூலம் பக்தர்களை அழைத்துச் செல்ல தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »