தெலுங்கானாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிடம் சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக, தெலுங்கானா அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அம்மாநிலத்தில் உள்ள 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. மேலும், மருத்துவமனைகள் சரிவர செயல்படாததும் தெரியவந்தது.
இந்நிலையில், அந்த 10 தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின் புதிதாக எந்த கொரோனா நோயாளியையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கக் கூடாது என தெலுங்கானா சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் மேலும், 79 மருத்துவமனைகளுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar