Press "Enter" to skip to content

அர்ஜெண்டினாவில் 37 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

அர்ஜெண்டினாவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

பியூனோஸ் ஐர்ஸ்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜெண்டினா 9-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், அர்ஜெண்டினாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 693 ஆக உள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 32.50 லட்சத்தை தாண்டியுள்ளது. 3.72 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »