ஈரான் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்குகிறது.
டெஹ்ரான்:
உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 8,876 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் 198 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 24.41 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 3.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar