சென்னையில் இன்று முதல் மின்சார தொடர் வண்டி சேவை அதிகரிக்கப்பட்டு கூடுதலாக 57 தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கியதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பல தொடர் வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் மின்சார தொடர் வண்டி சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வார நாட்களில் 151 மின்சார தொடர் வண்டி சேவை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று முதல் மின்சார தொடர் வண்டி சேவை அதிகரித்து சென்னைதொடர்வண்டித் துறை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 151-லிருந்து 208 மின்சார தொடர் வண்டி சேவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 86 மின்சார தொடர் வண்டி சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 32 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 தொடர் வண்டி சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 தொடர் வண்டி சேவையும் என 208 மின்சார தொடர் வண்டி சேவை இயக்கப்படும் என்று சென்னைதொடர்வண்டித் துறை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar