இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.
வாராந்திர பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் சரிந்து, தற்போது 4.17 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு 3.22 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதமானது 9 நாட்களாக 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,88,100 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.28 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 95.80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar