Press "Enter" to skip to content

நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை:

தமிழகம் முழுவதும் நேற்று முதல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

முதலமைச்சரின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »