Press "Enter" to skip to content

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் பிணை மனு தள்ளுபடி

நடிகை சாந்தினி அளித்த குற்றச்சாட்டின் பேரில் அடையாறு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கில் முன் பிணை கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உயர்நீதிநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

சென்னை:

நாடோடிகள் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருப்பவர் சாந்தினி.

இவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றியதாகவும், கருகலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டின் பேரில் அடையாறு மகளிர் காவல் துறையினர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் பிணை கேட்டு மணிகண்டன்   உயர்நீதிநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போது ஜூன் 9-ந்தேதி வரையில் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிநீதி மன்றம் தடை விதித்து இருந்தது.

இதையும் படியுங்கள்…முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு

இந்த நிலையில் இந்த மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. நீதிபதி அப்துல்குத்தூஸ் விசாரித்தார். மணிகண்டனின் முன் பிணை மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மணிகண்டன் கைது ஆவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »