கொரோனா ஊரடங்கு காரணமாக வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் ஆதாரை ஜூன் 1-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி பலர் ஆதாரை இணைத்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக காலநீட்டிப்பு வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், செப்டம்பர் 1-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
[embedded content]
Source: Maalaimalar