Press "Enter" to skip to content

தூத்துக்குடி, செங்கோட்டை உள்பட 13 சிறப்பு தொடர் வண்டிகளின் நேரம் மாற்றம்

பெரும்பாலான தொடர் வண்டிகளில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்குதொடர்வண்டித் துறை தெரிவித்துள்ளது.

சென்னை:

பயணிகளின் வசதி, தொடர் வண்டிகளின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்தை கொண்டு தொடர் வண்டிகளின் நேரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் தொடர் வண்டி நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி-மைசூர் இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு தொடர் வண்டி (06235) தினசரி மாலை 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். சாத்தூர் தொடர் வண்டி நிலையத்திற்கு மாலை 6.03 மணிக்கு வரும்.

ஜூன் 18-ந் தேதி முதல் ஒகா-தூத்துக்குடி வாராந்திர சிறப்பு தொடர் வண்டி (09568) தூத்துக்குடி நிலையத்தை அதிகாலை 4.40 மணிக்கு வந்தடையும்.

எழும்பூர்-தூத்துக்குடி தினசரி சிறப்புரெயில் (02693) தூத்துக்குடி தொடர் வண்டி நிலையத்தை காலை 6.40 மணிக்கு வந்தடையும். எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு தொடர் வண்டி (02661) காலை 8.25 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும்.

எழும்பூர்-ராமேசுவரம் தினசரி சிறப்பு தொடர் வண்டி (02205) அதிகாலை 4.20 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும். கொல்லம்-எழும்பூர் தினசரி சிறப்பு தொடர் வண்டி (06724) கோவில்பட்டிக்கு இரவு 8.53 மணிக்கும், சாத்தூருக்கு இரவு 9.13 மணிக்கும் வரும்.

திருநெல்வேலி-பாலக்காடு தினசரி சிறப்பு தொடர் வண்டி (06791), திருப்பதி- ராமேசுவரம் வாரம் 3 முறை சிறப்பு தொடர் வண்டி (06779) உள்பட 13 சிறப்பு தொடர் வண்டிகளில் இடைப்பட்ட சில தொடர் வண்டி நிலையங்கள், புறப்பாடு அல்லது வருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான தொடர் வண்டிகளில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்குதொடர்வண்டித் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »