மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். அவருடன் டி.ஆர். பாலு உடன் சென்றிருந்தார்.
சந்திப்பின்போது தடுப்பூசி, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வற்புறுத்துவார்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar