Press "Enter" to skip to content

ஜாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி கென்னத் கவுன்டா மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

ஜாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதியான கென்னத் கவுன்டா தனது 97-வது வயதில் காலமானார்.

புதுடெல்லி:

ஜாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி கென்னத் கவுன்டா காலமானார் என்ற அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி  எட்வர்ட் லுங்கு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கென்னத் கவுன்டா மகன் கம்ரேஞ்ச் கவுன்டாவும் அவரது மரணத்தை பேஸ்புக்கில் தெரிவித்தார். கென்னத் கவுன்டா முகநூல் பதிவில், “எம்.ஜி இல்லை என்று தெரிவிக்க வருத்தமாக இருக்கிறது. நாம் அனைவரும் அவருக்காகப் பிரார்த்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி  கென்னத் கவுன்டா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உலகத் தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியுமான மருத்துவர் கென்னத் கவுன்டா காலமானர் என்ற செய்தி  அறிந்து வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் ஜாம்பியா மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »