மொத்தம் உள்ள 75 இடங்களுக்கு நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜனதா 67 இடங்களை கைப்பற்றி சாதித்தது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட்டது. பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் ஆளும்கட்சி படுதோல்வியை தழுவியது.
மொத்தம் உள்ள 75 இடங்களுக்கு நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜனதா 67 இடங்களை கைப்பற்றி சாதித்தது. கொரோனாவை கையாண்ட விதம் உள்ளட பல்வேறு விஷயங்களில் யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
2016-ல் நடந்த இதே தேர்தலில் சமாஜ்வாடி கட்சி மொத்தம் உள்ள 75 இடங்களில் 60-ல் வெற்றி பெற்றிருந்தது.
சமாஜ்வாடி கட்சி வலிமையாக இருக்கக்கூடிய மெயின்பூரி, கன்னோஜ், பெரோஷாபாத் ஆகிய இடங்களும் கூட இந்த முறை பா.ஜனதா பக்கம் போய்விட்டது. பா.ஜனதா தில்லுமுல்லு செய்து இந்த வெற்றியை பெற்றதாக சமாஜ்வாடி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இந்த சந்திப்பு பற்றி சஞ்சய் சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவின் அடக்குமுறை கொள்கைகள் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஜில்லா பஞ்சாயத்து தேர்தல்கள் பற்றி இருவரும் விவாதித்ததாக கூறி உள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar