ரெய்டு மூலம் அச்சுறுத்தினால் அதையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து நடைபெற்ற ஆலோசனைக்கு பின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள்.
* ரெய்டு மூலம் அச்சுறுத்தினால் அதையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது.
* இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
* சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக தயாராக உள்ளது.
* எந்தவொரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் அரசியலில் அபாயகரமான சூழலை உருவாக்கும்.
* அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு ரெய்டு நடத்துவது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar