Press "Enter" to skip to content

அர்ஜென்டினாவில் உயரும் கொரோனா – 48 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

அர்ஜென்டினாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கத்தால் 1.03 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

பியூனோஸ் ஐர்ஸ்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜென்டினா 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அர்ஜென்டினாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.03 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 44.47 லட்சத்தை தாண்டியுள்ளது. 2.61 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »