Press "Enter" to skip to content

உத்தரகாண்டில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

உத்தரகாண்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

உத்தர்காஷி:

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி பகுதியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் கிழக்கே இன்று அதிகாலை 1.28 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. 

இதனால் மக்கள் தூக்கத்தில் இருந்து பதறியடித்துக் கொண்டு ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »