Press "Enter" to skip to content

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5-ந் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வருகிற 4-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து உலங்கூர்தி மூலம் வருகிற 3-ந் தேதி ஊட்டிக்கு வருகிறார். பின்னர் அவர் ராஜ்பவனில் தங்குகிறார். தொடர்ந்து 5-ந் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »