Press "Enter" to skip to content

உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை- ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பவே திமுக அரசு சோதனை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை:

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

* உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

* அதிமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே சோதனை நடத்தப்படுகிறது.

* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப திமுக அரசு சோதனை நடத்துகிறது.

* லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »