Press "Enter" to skip to content

ஈரானை விடாத கொரோனா – 54 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

ஈரானில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16 லட்சத்தைக் கடந்துள்ளது.

டெஹ்ரான்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஈரான் 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரானில் கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தை நெருங்கியுள்ளது.

அங்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »