Press "Enter" to skip to content

ஐதராபாத்தை 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை – பிளே ஆப் கனவு தகர்ந்தது

ஐதராபாத் அணிக்கு எதிராக பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக பறக்க விட்ட மும்பை அணியின் இசான் கிஷான், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

அபுதாபி:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெறற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. 

டாஸ் வென்று பேட் தேர்வு செய்த மும்பை அணி அதிரடியாக ஆடி 9 மட்டையிலக்குடுக்கு 235 ஓட்டங்கள் குவித்தது. இசான் கிஷான் பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக பறக்க விட்டு 32 பந்தில் 84 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். இதேபோல் சூர்யகுமார் யாதவும் 40 பந்தில் 82 ஓட்டங்கள் விளாசினார்.

ஐதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 மட்டையிலக்கு வீழ்த்தினார். ரஷித் கான், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு எடுத்தனர்.

இதையடுத்து 236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். ஜேசன் ராய் 34 ரன்னிலும், அபிஷேக் சர்மா 33 ரன்னிலும் அவுட்டாகினர். 

அடுத்து இறங்கிய கேப்டன் மணீஷ பாண்டே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், ஐதராபாத் அணி 8 மட்டையிலக்கு இழப்புக்கு 193 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது, மணீஷ் பாண்டே 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் மும்பை அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

மும்பை அணி சார்பில் பும்ரா, கவுல்டர் நைல், நீஷம் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர். இந்தப் போட்டியில் மும்பை வெற்றி பெற்றாலும்

பிளே ஆப் கனவு தகர்ந்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »