Press "Enter" to skip to content

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் ஒப்புதல்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. இம்மாத தொடக்கத்தில் அங்கீகாரம் அளித்துள்ளது.

ஜெருசலேம்:

இஸ்ரேல் நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 13.77 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் 8,143 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம்

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வழிபிறந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நவம்பர் 1 முதல் இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாடு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »