ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், வீடுகள் குலுங்கியதில் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
மும்பை:
மகாராஷ்டிராவின் கடலோர பகுதியான ரத்னகிரியில் இன்று அதிகாலை 2.36 மணிக்கு 4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், வீடுகள் குலுங்கியதில் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். மிதமான நிலநடுக்கம் என்பதால், பெரிதாக சேதம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை என்று தேசிய நில அதிர்வு மையத் தலைவர் ஜே.எல் கௌதம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar