Press "Enter" to skip to content

பிரியங்கா காந்திக்கு காய்ச்சல் -கட்சி நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி அங்கு முகாமிட்டு தேர்தல் பிரசார ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும், ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

உத்தர பிரதேச மாநில பொறுப்பாளராக உள்ள பிரியங்கா காந்தி அங்கு முகாமிட்டு தேர்தல் பிரசார ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, ந்நிலையில், பிரியங்கா காந்தி அங்கு சுற்றுப்பயணம் செய்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி நேற்று கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் அவர் கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »