பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
துபாய்:
ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு
அதன்படி, இந்தியாவில் 2 உலக கோப்பை உள்பட 3 தொடர்கள் நடைபெற உள்ளன. பாகிஸ்தானில் 2025-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது.
2024 – 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்
2025 – சாம்பியன்ஸ் டிராபி -பாகிஸ்தான்
2026 – 20 ஓவர் உலக கோப்பை- இந்தியா, இலங்கை
2027 – 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே
2028 – 20 ஓவர் உலக கோப்பை – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
2029 – சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா
2030 – 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,
2031 – 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்
பாகிஸ்தானில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar