Press "Enter" to skip to content

வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டத்தை தொடங்கி வைத்தார் மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

கடந்த செப்டம்பரில் 3 ஆயிரம் ரேஷன் பணியாளர்கள் மூலம் சிறிய அளவில் துவரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தியது அம்மாநில அரசு. மக்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று துவரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தால் 10 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். நாட்டிலேயே இது ஒரு முன்னோடியான திட்டம் என தெரிவித்தார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »