Press "Enter" to skip to content

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.50 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51.29 லட்சத்தைத் தாண்டியது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.50 கோடியைக் கடந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.05 கோடியைத் தாண்டியது.

மேலும், உலக அளவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு இதுவரை 51.29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களில் 1.93 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »