அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நாளைமறுதினம் நடக்க இருக்கிறது.
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் குறித்து அக்கட்சியின் தலைமை கடந்த 2-ந்தேதி செய்தி வெளியிட்டது. அதன்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. காலை 11.25 மணிக்கு பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி வரை வேட்புமனு திரும்பப்பெறலாம்.
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. 8-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.
அ.தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளின்படி, முதற்கட்டமாக கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்புத் தேர்தல் 13.12.2021 முதல் 23.12.2021 வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar