Press "Enter" to skip to content

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு

ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்பிணை வழங்க முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

சென்னை:

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் பிணை கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

முன்பிணை மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று நீதிபதி வழங்கினார். அதில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன் பிணை வழங்க முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »